சிறப்பு தரிசனம்
ஏக போகமாய் செல்வம் கொழிக்கும்
ஏழை ஆனாலும் எகத்தாளமாய்
எட்டி உதைக்கும்.
ஆண்டவன் முன் அனைவரும் சமமாம்.
ஆலயத்தில் மட்டும் ஏன் விதிவிலக்கு?
வரம் வேண்டுதல்கூட
கரம் தொட்டு தரும் காசில்தான்
உரமாகி வருவது உளம் கொல்லும் உண்மை.
காக்கும் கடவுளரும் காசுக்கு விலை போய்
காட்சி பொருளாகும் நிலை ஏன்?
துலாபாரமாய் நீதி கிட்டும் நம்பிக்கைதான் கோவில் என்றால்
வியாபாரமாய் அந்நீதியும் பணம் பார்க்கும் கொடுமை ஏன்?
உறுப்பு நோக நடந்தும் புரண்டும் - கடவுளின்
இருப்பு காண வரும் பக்தர்
கறுப்பு பணம் உண்டியல் சேர்க்கும் கயவர்க்கு பின்னே
விருப்பு இன்றி செல்வது ஏன்?
ஏழை ஆனாலும் எகத்தாளமாய்
எட்டி உதைக்கும்.
ஆண்டவன் முன் அனைவரும் சமமாம்.
ஆலயத்தில் மட்டும் ஏன் விதிவிலக்கு?
வரம் வேண்டுதல்கூட
கரம் தொட்டு தரும் காசில்தான்
உரமாகி வருவது உளம் கொல்லும் உண்மை.
காக்கும் கடவுளரும் காசுக்கு விலை போய்
காட்சி பொருளாகும் நிலை ஏன்?
துலாபாரமாய் நீதி கிட்டும் நம்பிக்கைதான் கோவில் என்றால்
வியாபாரமாய் அந்நீதியும் பணம் பார்க்கும் கொடுமை ஏன்?
உறுப்பு நோக நடந்தும் புரண்டும் - கடவுளின்
இருப்பு காண வரும் பக்தர்
கறுப்பு பணம் உண்டியல் சேர்க்கும் கயவர்க்கு பின்னே
விருப்பு இன்றி செல்வது ஏன்?