Saturday, September 24, 2011

tamil kavithai - theendum sugam

எஞ்சிய சுகம்

ராசை நேத்திரன்

தூண்டும் சுகம்
தீண்டும் போதும்
வருவதில்லை..
வேண்டும் சுகம்
தீண்டிய பின்
சுவைப்பதில்லை..
தாண்டிய பின்
வேண்டிய சுகம்
நிலைப்பதில்லை..
வேண்டிய சுகம்
வாடிய பின் கிடைப்பதில்
அர்த்தமில்லை..
தூண்டிய பின்
மீண்ட சுகம்
அலுப்பதில்லை..
எஞ்சிய சுகம்
மிஞ்சிய பின்
தொடர்வதில்லை..
வாழ்வின் சுவை
ருசிக்கும் வரை
தெரிவதில்லை..
ருசிக்கும் வாழ்க்கை
நிலைப்பதில்லை!!!

No comments:

Post a Comment